திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அரசுப் பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சின்ன காந்திபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளியில் பணிபுரியும் 9 ஆசிரியர்களுக்கும், பள்ளியில் பயிலும் 20 மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆசிரியைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அரசுப் பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.