தமிழ்நாடு

'சாதிய வன்மத்துடன் பேசினாரா?' - அரியலூர் மாவட்ட ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

webteam

சாதிய வன்மத்துடன் செயல்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து அரியலூர் ஆட்சியர் விளக்கமளிக்க மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

சாதிய வன்மத்துடன் செயல்படும் அரியலூர் மாவட்ட கலெக்டர் என ஒரு மாத இதழில் செய்தி வெளியாகி இருந்தது.

இதையடுத்து மாநில மனித உரிமை ஆணையம், தாமாக முன்வந்து சாதிய வன்மத்துடன் செயல்படுவதாக வெளியான செய்திக்கு அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி இரண்டு வாரங்களில் விளக்கமளிக்க வேண்டுமென நோட்டீஸ் அனுப்பியுள்ளது.