தமிழ்நாடு

சிகாகோவில் ஓபிஎஸ் - உற்சாக வரவேற்பு அளித்த அமெரிக்க வாழ் தமிழ் மக்கள்

webteam

அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றடைந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சிகாகோ விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேனி எம்பி ரவீந்திரநாத் குமார் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றடைந்தனர். சிகாகோ விமான நிலையத்தில் காத்திருந்த, அமெரிக்க வாழ் தமிழ் மக்கள் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்தும், மாலை அணிவித்தும் வரவேற்பு அளித்தனர்.

இன்று மாலை சிகாகோ நகரில் குழந்தைகள் தின நிகழ்ச்சியில் துணை முதல்வர் கலந்து கொள்கிறார். அதனைத்தொடர்ந்து நாளை நடைபெறும் விழாவில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு 'International Rising Star of the year-Asia Award' விருது வழங்கப்படவுள்ளது. 

12ஆம் தேதி சிகாகோவில் தொழில் நிறுவனங்கள் தொடர்பான வட்ட மேசை கருத்தரங்கில் கலந்துகொள்ளும் அவர், 13ஆம் தேதியன்று வாஷிங்டன் செல்கிறார். 14ஆம் தேதி ஹுஸ்டன் நகருக்கு செல்லும் அவர், தமிழ்நாட்டில் முதலீடு செய்வது தொ‌டர்பாக தொழில் முனைவோர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.

அதனைத் தொடர்ந்து 15ஆம் தேதி ஹுஸ்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கைக்கான Electronics Donor Board-ஐ தொடங்கி வைக்கிறார். 16ஆம் தேதி நியூயார்க் சென்று அமெரிக்காவாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்வில் பங்கேற்கும் அவர், 17ஆம் தேதி சென்னை திரும்புவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.