தமிழ்நாடு

கரையைக் கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்

Sinekadhara

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுமண்டலம் சென்னை அருகே கரையைக் கடந்ததாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

தாழ்வு மண்டலம் கரையை கடந்தபோது 45 கி.மீ முதல் 55 கி.மீ வரை காற்று வீசியதாகவும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. தாழ்வுமண்டலமானது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நாளை வலுவிழக்கும் என்றும் வானிலை மையம் அறிவித்திருக்கிறது.