தமிழ்நாடு

மெரினாவில் சுதந்திர போராட்ட வீரர்களின் அலங்கார ஊர்திகள்: பார்த்து ரசிக்கும் மக்கள்

ஜா. ஜாக்சன் சிங்

குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்ற அலங்கார ஊர்திகள் சென்னை மெரினா கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை பொதுமக்கள் பார்த்து ரசித்து வருகிறார்கள்.

டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு தமிழகத்தில் சார்பாக அணிவகுப்பிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த ஊர்திகள் பின்னர் சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்றன. அதன் தொடர்ச்சியாக, இந்த ஊர்திகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டன. ஒட்டுமொத்தமாக மூன்று ஊர்திகள் உள்ளன,

தற்போது இந்த ஊர்திகள் இன்றிலிருந்தே வரும் 23-ஆம் தேதி வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஊர்திக்கும் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது., மூன்று ஊர்திகளையும் மக்கள் பார்த்து ரசித்து வருகிறார்கள் அத்துடன் குடும்பத்துடன் செல்பி எடுத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.