தமிழ்நாடு

திருக்கோயில்கள் சார்பில் தினமும் ஒரு லட்சம் உணவு பொட்டலங்கள்: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

webteam

திருக்கோயில்கள் சார்பில் தினந்தோறும் ஒரு லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான உணவுப் பொட்டலங்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் நிலையில் , கொரோனா நோய் பாதிப்பு குறையும் வரை அவற்றை உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி ஒரு லட்சம் பயனாளிகளுக்கு தினமும் 30 லட்சம் ரூபாய் செலவில் மதிய உணவு வழங்கப்படுவதுடன் கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசமும் வழங்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார்.