தமிழ்நாடு

முப்படை தலைமை தளபதி மறைவு: மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்திய பள்ளி மாணவர்கள்

kaleelrahman

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதிக்கு உசிலம்பட்டி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் மறைவிற்கு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள சக்கரவர்த்தி வித்யாலயா பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி மலர்தூவி மௌன அஞ்சலி செலுத்தினார்.