தமிழ்நாடு

தமிழ்நாட்டில் 15,000க்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

Sinekadhara

தமிழ்நாட்டில் ஒரேநாளில் 14,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தமிழக மருத்துவத்துறை தெரிவித்திருக்கிறது.

நேற்று 16,096 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியாகியிருந்த நிலையில், இன்று 1,31,258 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 14,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் 15 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 22 பேரும் என ஒரேநாளில் 37 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37,636 ஆக உயர்ந்திருக்கிறது. சென்னையில் நேற்று 2,348 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்த நிலையில் இன்று 2,054 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கொரோனாவிலிருந்து மேலும் 24,576 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 31,59,694 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,88,599இல் இருந்து 1,77,999ஆக குறைந்துள்ளது.