marina beach
marina beach PT
தமிழ்நாடு

சென்னையில் கொட்டித்தீர்க்கும் கனமழை.. வெள்ளக்காடாக மாறிய மெரினா கடற்கரை!

Rajakannan K

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்துவருகிறது. இடைவிடாமல் மழை பெய்து வருவதால் சென்னையின் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தாழ்வான பகுதிகளில் மழை நீரானது வீடுகளில் புகுந்ததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அத்துடன், இன்று இரவு வரை மழையும், காற்றும் தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக சென்னை மெரினா கடற்கரை வெள்ளக்காடாக மாறியுள்ளது.