இறந்தவர்களின் சடலத்தை எடுத்துச்செல்ல முறையான பாதையின்றி வயல்வெளியில் எடுத்துச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் கொம்பாடித்தெரு மற்றும் கஸ்பா தெருக்களில் 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதி மக்களுக்கு தனியாக சுடுகாடு உள்ளது. இந்நிலையில் இறந்த முதியவரின் உடலை எடுத்துச் செல்ல முறையான பாதை இல்லாமல் வயல் வெளியில் எடுத்துச் செல்லும் அவலம் அரங்கேறி வருகிறது.
மேலும் வயல்வெளியிலும் குறுகிய வரப்பிலும் எடுத்துச் செல்வதால், சேற்றில் சிக்கி கீழே விழும் நிலையில், சடலத்திற்கு இறுதிச்சடங்கு செய்ய வேண்டியுள்ளது என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதில் பெரும் சவாலாக இருப்பதால் மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சுடுகாட்டிற்கு பாதை அமைத்துத் தர வேண்டுமெ கோரிக்கை வைத்துள்ளனர்.