தமிழ்நாடு

கடலூர்: மின்கசிவு காரணமாக 4 வீடுகள் எரிந்து நாசம் -ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

webteam

கடலூர் மாவட்டம் பெருமுளை கிராமத்தில் மின்கசிவு காரணமாக 4 வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளது.

கடலூர் மாவட்டம் பெருமுளை கிராமத்தில் இருக்கும் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் திடீரென ஏற்பட்ட மின்கசிவால் கூரை வீடுகளில் தீப்பிடித்து எரிந்தது. தீயை கட்டுக்குள் கொண்டுவந்து அணைப்பதற்குள் காற்றின் வேகத்தால் அருகருகே இருந்த 4 வீடுகளில் தொடர்ந்து தீ பரவியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 4 வீடுகள் தாண்டி தீ பரவாமல் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும் வீட்டுக்குள் இருந்தப் பொருட்களை வெளியே கொண்டுவர முடியாமல் போனதால், ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 4 வீடுகளும் முற்றிலுமாக சேதமடைந்தன. இதனால் ரூ.5 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் மொத்தமாய் எரிந்து சாம்பலானது.

இந்நிலையில் நான்கு கூலித் தொழிலாளர் குடும்பங்களும் வீட்டை இழந்து தவித்து வருகின்றனர். மேலும் அதிர்ஷ்டவசத்தால் தீ விபத்தில் எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை.