தமிழ்நாடு

ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: கச்சா எண்ணெய் கசிவால் விவசாய நிலம் பாதிப்பு

Sinekadhara

திருவாரூரில் ஓ.என்.ஜி.சி குழாய் உடைந்து கச்சா எண்ணெய் வெளியேறியதால் ஒரு ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது.

பனையூர் கிராமத்தில் சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான, விவசாய நிலத்திற்கு கீழே ஓ.என்.ஜி.சி எண்ணெய்க்குழாய் செல்கிறது. இந்நிலையில் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு, கச்சா எண்ணெய் வெளியேறி வருகிறது. இதனால் விளைநிலம் முழுவதும் எண்ணெய் பரவியுள்ளது. குறுவை சாகுபடி பணிகளைத் தொடங்கி இருந்த நிலையில், எண்ணெய் வெளியேறியதால், இனி விவசாயம் செய்யமுடியாது என விவசாயி கவலை தெரிவித்துள்ளார். உடனடியாக ஓ.என்.ஜி.சி அதிகாரிகள், குழாய் உடைப்பை சரிசெய்து இழப்பீடு வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.