தமிழ்நாடு

ஜிலு ஜிலு குளிர், ஜில்லுனு சாரல்: குற்றாலம் ரெடி!

webteam

குற்றாலத்தில் சீசன் களைகட்டத் தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

வழக்கமாக ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை குற்றாலத்தில் சீசன் தொடங்கும். கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
 
நேற்று சாரல் அதிகரித்ததாலும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிகமான மழை பெய்ததாலும் முதலில் ஐந்தருவியில் அதிகரித்த தண்ணீர் வெள்ளப்பெருக்காக மாறியது. நீண்ட நாளுக்கு பின் தண்ணீர் விழுவதால் அருவியின் நிறம் மாறி காணப்பட்டது. இதனால் குளிப்பதற்கு காவல்துறையினர் முதலில் தடை விதித்திருந்தனர். பின்னர் வெள்ளப்பெருக்கு குறைந்ததால், பயணிகளை குளிக்க அனுமதித்தனர்.
இன்றும், நாளையும் விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்து வருகின்றனர்.