தமிழ்நாடு

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் முதல்வர் பழனிசாமி

webteam

சேலம் மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை முதல் பரப்புரையில் ஈடுபட உள்ள நிலையில் அவர் இன்று சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியினை செலுத்திக்கொண்டார். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். அதனைத்தொடர்ந்து பேசிய முதல்வர், “ தமிழகத்தில் இதுவரை 11.45 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும், 2682 அரசு மருத்துவமனைகளிலும், 924 தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. ஆகவே நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.” என்றார்.