தமிழ்நாடு

கொரோனா இரண்டாம் அலை சுனாமி போல வருகிறது - கொரோனா தடுப்புப் சிறப்பு அதிகாரி

Veeramani

கடந்தாண்டு, முதல் கொரோனா அலை சிறிய அளவிலேயே இருந்த நிலையில், தற்போது சுனாமி போல இரண்டாவது கொரோனா அலை வந்துகொண்டிருப்பதாக சென்னைக்கான கொரோனா தடுப்புப் பணியின் சிறப்பு அதிகாரி சித்திக் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதுகுறித்து கூறுகையில், “முதல் கொரோனா அலை சிறிய அளவிலேயே இருந்தது. தற்போது சுனாமி போல கொரோனா அலை வருகிறது. அனைத்து கொரோனா தடுப்பு நடவடிக்கையும் எடுத்து வருகிறோம். கொரோனாவை தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது” என்றார்.