தமிழ்நாடு

தமிழகத்தில் 22,000-க்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு - 443 பேர் உயிரிழப்பு

webteam

தமிழகத்தில் இன்று 21,410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தொடர்ந்து 15 வது நாளாக ஒருநாள் மொத்தபாதிப்பு குறைந்துள்ளது. அதிகபட்சமாக கோவையில் 2,663 பேரும் சென்னையில் 1,789 பேரும், செங்கல்பட்டில் 862 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 2 வது நாளாக கொரோனா பாதிப்பு 2,000 க்கும் கீழ் குறைந்துள்ளது. உயிரிழப்புகளை பொருத்தவரை அரசு மருத்துவமனைகளில் 277 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 166 பேரும் என 443 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 62 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26,571 ஆக உயர்ந்துள்ளது.