தமிழ்நாடு

தஞ்சாவூரில் 56 பள்ளி மாணவிகளுக்கு கொரோனா தொற்று!

webteam

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே இருக்கும் அரசு உதவிப்பெறும் பள்ளியில் 56 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை அரசு உதவிப்பெறும் பள்ளியில், கடந்த 8 ஆம் தேதி மாணவி ஒருவருக்கு காய்ச்சல் இருந்த நிலையில் அந்த மாணவிக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

அதனைத்தொடர்ந்து இதர மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவுகளில் நேற்று 20 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது மேலும் 36 மாணவிகளுக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட மாணவிகள் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.