தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று 28,897 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 236 பேர் உயிரிழப்பு

webteam

தமிழகத்தில் இன்று 28,897 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 28,869 வெளிமாநிலங்களில் இருந்து வந்த 29 பேர் என மொத்தம் 28,897 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் 12 வயதிற்கு உட்பட்ட 1,012 சிறார்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஒரே நாளில் 7,130 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஒரே நாளில் அரசு மருத்துவமனையில் 151 பேர் தனியார் மருத்துவமனைகளில் 85 பேர் என மொத்தம் 236 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15, 648 ஆக உயர்ந்துள்ளது.