தமிழ்நாடு

அரசின் அலட்சியத்தால்தான் மீண்டும் கொரோனா அதிகரிப்பு: மருத்துவர் ரவீந்திரநாத்

Veeramani

கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், தமிழக அரசு கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளாக புதிய கட்டுப்பாடுகளை அறிவித்திருக்கிறது. அரசின் அலட்சியத்தால்தான் மீண்டும் கொரோனா அதிகரித்திருப்பதாக மருத்துவர் ரவீந்திரநாத் குற்றம்சாட்டியிருக்கிறார். கோயில் திருவிழாக்கள் மற்றும் மதசார்ந்த கூட்டங்கள் நடத்த தடை விதித்திருக்கும் தமிழக அரசு, மேலும் பல புதிய வழிகாட்டுதல்கள் நடவடிக்கைகளையும், கட்டுப்பாடுகளையும் அறிவித்திருக்கிறது.