தமிழ்நாடு

கொரோனா தடுப்பு பணியின்போது தொற்று ஏற்பட்டு உயிரிழந்தால் ரூ.50 லட்சம் நிவாரணம்: முதல்வர்

Rasus

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினர் உயிரிழக்க நேரிட்டால் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தெரிவித்துள்ள அவர், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மருத்துவம், காவல், உள்ளாட்சி, தூய்மைப் பணியாளர் உள்பட அனைத்து துறை பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால் இந்த நிதியுதவி வழங்கப்படும் எனக் கூறியுள்ளார். அத்துடன் கொரோனா தடுப்பு பணியின் போது தொற்று ஏற்பட்டு உயிரிழக்கும் மருத்துவர் உள்ளிட்ட அனைத்துத்துறை பணியாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் எனவும் முதல்வர் கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பு பணியின் போது தொற்று ஏற்பட்டு உயிரிழக்கும் அனைவரின் உடலும் பாதுகாப்புடனும், உரிய மரியாதையுடனும் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.