தமிழ்நாடு

’நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல்’ - மதுரை ஹிஜாப் போராட்டத்தில் பேசிய மூவர் மீது வழக்குப்பதிவு

Sinekadhara

கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடைவிதித்த கர்நாடகா நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹிஜாப் தடைக்கு எதிராக மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் பகுதியில் கடந்த 17ம் தேதி போராட்டம் நடைபெற்றது. அப்போது, தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் மாநில தணிக்கை குழு உறுப்பினர் ரஹமத்துல்லா, கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்தும், தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ரஹமதுல்லா உள்ளிட்ட 3 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை தேடி வருகின்றனர்.