குஷ்பு
குஷ்பு pt web
தமிழ்நாடு

“குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும்”; சுட்டிக்காட்டிய காங்கிரஸ்

PT WEB

நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள குஷ்பு, சிலரைப்போல தன்னால் சேரி மொழியில் பேச முடியாது எனக் கூறியது தமிழக காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் பட்டியலின மக்களை நேரடியாக குஷ்பு அவமதித்துள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசலாம் என குஷ்பு நினைக்கிறாரா? எனக் கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் கட்சி, பாஜகவில் மகளிர் நிர்வாகிகள் பாலியல் தாக்குதலுக்கு ஆளானபோது எங்கே போயிருந்தார் எனக் கேள்வி எழுப்பியுள்ளது.

எனவே, தமது தவறை திருத்திக்கொண்டு அந்தப் பதிவை குஷ்பு உடனடியாக நீக்க வேண்டும்; அவர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குஷ்பு மன்னிப்பு கேட்காவிட்டால் லட்சக்கணக்கான பட்டியலின மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.