தமிழ்நாடு

சதை அழிவுறும்; அவர் கதை அழிவுறாது - சா. கந்தசாமி மறைவுக்கு வைரமுத்து இரங்கல்

webteam

சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் சா. கந்தசாமி, சென்னையில்  இன்று உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில்  காலமானார். அவரது மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

டிவிட்டரில் அவர் வெளியிட்ட செய்தியில், “மறைந்தாரே சா.கந்தசாமி! ‘சாயாவனம்’ சாய்ந்துவிட்டதே!  தன்மானம், தன்முனைப்பு, தனி அடையாளமென்று மெய்வெளியில் இயங்கிய கலைஞன் அல்லனோ! சதை அழிவுறும்; அவர் கதை அழிவுறாது என்று குறிப்பிட்டுள்ளார்.