தமிழ்நாடு

சென்னையில் பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூட தடை தொடரும் - காவல் ஆணையர்

webteam

சென்னையில் பொதுஇடங்களில் 5 பேருக்கு மேல் கூட தடை தொடர்கிறது என காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை தடை தொடரும். சென்னையில் பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூட தடை தொடர்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி நள்ளிரவு வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் ஏற்கெனவே இருந்த தளர்வுகளும் மேலும் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.