தமிழ்நாடு

ஸ்டெர்லைட் போராட்டம்: ஜன.19-ல் ஆஜராக ரஜினிக்கு சம்மன்!

webteam

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்த விசாரணைக்கு ஜனவரி 19 ஆம் தேதி ஆஜராக, நடிகர் ரஜினிகாந்த்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை விசாரித்து வரும் அருணா ஜெகதீசன் ஆணையம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

முன்னதாக, ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின் பின்னணியில் சமூக விரோதிகள் இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்தார். இதுகுறித்து ஆணையம் ரஜினிகாந்துக்கு விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், விளக்கம் தராத நிலையில் இன்று மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.