தமிழ்நாடு

ஆழ்துளை கிணறை மூட கோரி போன் செய்த வாலிபர் - ராஸ்கல் என திட்டிய ஆட்சியர்   

webteam

ஆழ்துளை கிணறை மூட வலியுறுத்தி தொலைபேசி மூலம் கோரிக்கை விடுத்த இளைஞரை ராஸ்கல் போனை வை என அநாகரிகமாக கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பேசியதாக ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

கரூர் மாவட்டம் கடவூர் வட்டத்திலுள்ள செம்பிய நத்தம் கிராமத்தில் திறந்து கிடக்கும் ஆழ்துளை கிணறு ஒன்றை மூடக்கோரி அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர்,  மாவட்ட ஆட்சியரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். அதற்கு மாவட்ட ஆட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் நேரில் சென்று தெரிவிக்குமாறு தெரிவித்தார்

அப்போது, அந்த இளைஞர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை தெரிவித்தும் மூடவில்லை என்று பதில் கூறினார். அதற்கு ஆட்சியர் மிகவும் டென்ஷனாகி ஆட்சியர் என்றால் நீங்கள் கூப்பிடும்போதெல்லாம் வர முடியுமா எனக் கூறியதோடு ராஸ்கல் எனவும் திட்டியதாக கூறப்படுகிறது.      ஆட்சியருடன் நடந்த உரையாடலை அந்த இளைஞர் தனது செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.