தமிழ்நாடு

கோவை: அமைச்சர் வேலுமணி பெயரை மோடி சொன்னதும் கைதட்டால் அதிர்ந்த அரங்கம்

kaleelrahman

தமிழகத்தில் வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி பேசும்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெயரைச் சொன்னார் அப்போது அரங்கத்தில் கைதட்டல் பலமாக இருந்தது. 

தமிழகம் வந்துள்ள பாரத பிரதமர் மோடி பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றும்போது, முதல்வர் பழனிசாமி, ஓபிஎஸ் என ஒவ்வொருவருடைய பெயராக சொல்லிக் கொண்டே வந்தார். அப்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி என்று சொன்னதும் கூட்டத்தில் இருந்து பலமாக கைதட்டல்கள் ஒலித்தது.