தமிழ்நாடு

கோவை: மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய ஆசிரியர் பணியிடை நீக்கம்

kaleelrahman

கோவையில் மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி ஆசிரியர் மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கோவை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர், 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளிடம் ஆபாசமாக பேசுவது, புகைப்படம் அனுப்பக்கோரி வறுபுறுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவரை கைது செய்யக்கோரி பள்ளி மாணவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து கோவை  அரசுப்பள்ளியில் பணியாற்றும் கணினி ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.