தமிழ்நாடு

கோவை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு

JustinDurai

கோவை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம், நுழைவுச் சீட்டைக் கேட்டு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தியதால் சலசலப்பு ஏற்பட்டது.

பழனியிலிருந்து சென்னை செல்வதற்காக, கோவை விமான நிலையத்துக்குச் சென்ற எல்.முருகனிடம், நுழைவுச்சீட்டைக் காட்டுமாறு கேட்டு மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தினர். இதில் எல்.முருகனும் அவருடன் வந்தவர்களும் அதிருப்தியடைந்தனர். பின்னர், அவருக்கும் அவருடன் வந்தவர்களுக்கும் ஏற்கெனவே நுழைவுச்சீட்டை வாங்கியிருந்த நபர், அங்கு வந்து கொடுத்த பின் அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்.

இதையும் படிக்கலாம்: சாலையில் தடுப்புகளை வைத்து சொகுசு வாக்கிங்: காவல்துறை அதிகாரிக்கு நோட்டீஸ்!