தமிழ்நாடு

திருவாரூர்: 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

JustinDurai
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக மாவட்டத்தில் பணிபுரியும், மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் ஊழியர்கள் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர். மாநில அளவில் கடன் வழங்க வழிகாட்டு நெறிமுறைகள் வழங்க வேண்டும்; விவசாய கடன் வழங்க குறியீடுகளை வைத்து பணியாளர்களை கண்ணியக் குறைவாக நடத்தக்கூடாது; அரசு பணியாளர்களுக்கு ஓய்வு ஊதியம், கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 150க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்டனர்.