தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வென்று, பிற கட்சிகளுடன் ஆதரவுடன் ஆட்சியமைத்திருக்கும் நிலையில், முழுமையான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம், நேற்று சட்டசபையில் மீண்டும் தொடங்கியது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசினார். அதற்கு, பல்வேறு அமைச்சர்கள் பதிலளித்தனர். தொடர்ந்து இதற்கு முதல்வர் விஜய் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தொடர்பாக முதல்வர் விஜய் உரையாற்றினார். அப்போது திமுக குறித்து கடுமையாக விமர்சித்தார்.
குறிப்பாக, குட்டிக்கதை ஒன்றைச் சொன்னார். அவர், “ஒரு ஊர்ல ஒரு பெரியர் வெயில் ரொம்ப ஜாஸ்தியா இருக்குனு சொல்லிட்டு, கண்ணுக்கு மேல, இப்படி கைவைத்துக்கிட்டு சுத்திமுத்தியும் தேடிக்கிட்டு இருந்தாராம். அப்போ கூட இருந்த ஒரு சின்ன பையன், ’என்ன தேடுறீங்க’னு கேட்டானாம். அதுக்கு அந்தப் பெரியவர் சொன்னாராம். ’ஒண்ணுமில்ல தம்பி. உங்க அப்பா இங்கேதான் இருப்பாருனு சொன்னாங்க. அதான் தேடிக்கிட்டு இருக்கேன். எங்க, உங்க அப்பாவையே காணோம்..’” என்றவர், தொடர்ந்து “எங்களுக்கும் நக்கலாக, நையாண்டியாக சம்பமிந்தமில்லாத குட்டிக்கதை எல்லாம் எங்களுக்கும் பேசத் தெரியும். அந்தக் கதையில அந்தப் பெரியவர் அப்படிச் சொன்னாராம். தப்பா எடுத்துக்காதீங்க. அதனால இங்க யாரும் டென்ஷன் ஆக வேண்டாம்” என்றார்.