தமிழ்நாடு

“7 பேர் விடுதலையில் இனி ஆளுநரே முடிவெடுக்க வேண்டும்” - முதலமைச்சர் பழனிசாமி

webteam

7 பேர் விடுதலை தொடர்பான தீர்மானம் குறித்து ஆளுநரை சந்தித்து வலியுறுத்தினீர்களா என சட்டப்பேரவையில் எதிர்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, 7 பேர் விடுதலை விவகாரத்தில் தங்கள் வேலையை சரியாக செய்தோம் என தெரிவித்தார். எங்கள் அதிகாரித்திற்குட்பட்டு அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினோம் என்றும், அத்துடன் இனி ஆளுநரே முடிவெடுக்க வேண்டும் எனவும் கூறினார். திமுக ஆட்சிக்காலத்தில் செய்யாததை தாங்கள் செய்தோம் என்றும் குறிப்பிட்டார்.