தமிழ்நாடு

முதலமைச்சர் பழனிசாமியின் மாமனார் காலமானார்..!

Rasus

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மாமனார் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மாமனார் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று மருத்துவமனையில் உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மாமனார் காளியண்ணன், மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.

இதனையடுத்து உறவினர்கள் அவரது சடலத்தை அம்மா பாளையத்தில் உள்ள சொந்த வீட்டிற்கு கொண்டு சென்றனர். தமிழக முதல்வரும், மாமனார் இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்