mk stalin
mk stalin pt web
தமிழ்நாடு

“சொந்த விறுப்பு, வெறுப்புகளை ஒதுக்க வேண்டும்” - ஐஏஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின்

PT WEB

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இரு நாட்கள் மாவட்ட ஆட்சியர்களின் மாநாடு நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், அரசு பிரதிநிதிகளாக இருக்கும் அதிகாரிகள், சொந்த விறுப்பு வெறுப்புகளை ஒதுக்கிவிட்டு, மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், “எந்தவொரு திட்டமும் முதல்வர் மற்றும் கட்சியின் திட்டமாக கருதக்கூடாது. அரசு அதிகாரிகள் அனைவரும் தங்கள் கனவு திட்டமாக கருதவேண்டும். மக்களுக்கான திட்டமாக நினைத்து முழு ஈடுபாட்டுடன் செயல்படுத்த வேண்டும். அரசின் திட்டங்கள் என்பது அதிகாரிகளின் குழந்தைகளாக கருதப்படும். அதிகாரிகள் நினைத்தால் திட்டம் வளர்ச்சியடையும்; இல்லையெனில் மெலியும்” என்றார்.