ஈரோடு: கைத்தறித் தொழிலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்!
இரு நாள் பயணமாக ஈரோடு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டுக்கடையில் உள்ள தறிப்பட்டறையில் தொழிலாளர்களுடன் உரையாடினார். அதில், “விசைத்தறிக் கூடங்களுக்கான இலவச மின்சாரம் ஆயிரம் யூனிட்டாக உயர்த்தப்பட்டது பயனாக இருக்கிறதா?” என்று கேட்டார்.