தமிழ்நாடு

கண் தானம் செய்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன் : முதலமைச்சர் பழனிசாமி

கண் தானம் செய்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன் : முதலமைச்சர் பழனிசாமி

webteam

கண் தான தினத்தையொட்டி கண்தானம் செய்வதில் உளமார மகிழ்ச்சி கொள்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “ஒளியற்ற விழிகளுக்கு ஒளியாகி இவ்வுலகை காணச்செய்திட அனைவரும் மனுமுவந்து கண்தானம் செய்ய வேண்டுமென அறிவுறுத்தும் தேசிய கண் தான நாளையொட்டி கண்தானம் செய்வதில் உளமார மகிழ்ச்சி கொள்கிறேன். அனைவரும் கண்தானம் செய்ய முன்வர வேண்டுமென இந்நாளில் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். கண்தானம் செய்வோம்!” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.