தமிழ்நாடு

ஜெனீவாவில் வைகோவை தாக்க முயற்சி: முதல்வர் பழனிசாமி கண்டனம்

webteam

ஜெனிவாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை தாக்க சிங்களவர்கள் முயற்சி செய்த சம்பவத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சியும், கண்டனமும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அ‌வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வைகோவை‌ சிங்களர்கள் தாக்க முற்பட்ட செயல் மிகுந்த கண்டனத்திற்குரியது என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக வைகோவுக்கு பாதுகாப்பு அளிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும், இதுபோன்ற செயல்கள் வருங்காலத்தில் நிகழா வண்ணம் தகுந்த நடவடிக்கை எடுத்திடவும் மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.