தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களை திறக்க முதலமைச்சர் பழனிசாமி அனுமதி அளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் நிலையங்கள் உட்பட அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து படிப்படியாக தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது உடற்பயிற்சி நிலையங்களை திறக்க முதலமைச்சர் பழனிசாமி அனுமதி அளித்துள்ளார். வரும் 10ஆம் தேதி முதல் தமிழகத்தில் தனியார் உடற்பயிற்சி கூடங்களை திறக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.