தமிழ்நாடு

நின்றிருந்த லாரி மீது மாநகர பேருந்து மோதி விபத்து: நொறுங்கிய கார்

kaleelrahman

சாலையில் நின்றிருந்த லாரி மீது மாநகர பேருந்து மோதிய விபத்தில் ஓட்டுநர் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அடுத்த கரசங்கால் அருகே சாலையில் யூ டர்ன் செய்வதற்காக வேன் ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியே வந்த டாரஸ் லாரி வேனை இடது பக்கமாக முந்தி செல்ல முயன்றது. ஆனால் முடியாததால் லாரி நின்றிருந்தது.

இதை கவனிக்காத மாநகர பேருந்து ஓட்டுநர் லாரி மீது மோதியதில் ஓட்டுநர் வெங்கடேசன், நடந்துநர் ஹரிஹரன் உட்பட பேருந்தில் பயணம் செய்த சுமார் 10- க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து பேருந்தின் பின்னால் கார் மோதியதில் கார் முற்றிலும் சேதமானது.

தகவலறிந்து அங்கு வந்த மணிமங்கலம் உதவி ஆணையர் ரவி காயமடைந்தவர்களை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வாகனங்களை அங்கிருந்து அகற்றினர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் லாரி ஓட்டுநர் அருள்ராஜிடம் விசாரித்து வருகின்றனர்.