கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு உதகையில் சாக்லெட் திருவிழா நடைபெற்று வருகிறது.
நீலகிரி மாவட்டம் உதகையில் தனியார் நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் சாக்லெட் திருவிழா நடைபெற்று வருகிறது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக 15 நாட்கள் சாக்லெட் திருவிழா நடைபெறுகிறது.
சுமார் 120 கிலோ சாக்லெட்டை கொண்டு 2 ஆயிரத்து 20 வடிவங்களில் சாக்லெட்கள் தயாரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கீழடியில் கிடைத்த பழங்கால பொருட்களின் வடிவங்களிலும் சாக்லெட்டுகள் இடம்பெற்றுள்ளன.
மூங்கில் அரிசி, தினை, சாமை, குதிரைவாலி உள்ளிட்ட 8 தானியங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட சாக்லெட்டுகளும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. ஒரு கிலோ 300 ரூபாய் முதல் 3 ஆயிரத்து 500 ரூபாய் வரை விலை கொண்ட சாக்லெட்டுகள் திருவிழாவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.