தமிழ்நாடு

தைபூச விழாவையொட்டி சாமியாருக்கு மிளகாய்பொடி அபிஷேகம்

கலிலுல்லா

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே தைபூச திருவிழாவையொட்டி சாமியாருக்கு மிளகாய்பொடி அபிஷேகம் நடைபெற்றது.

தேவதானம்பேட்டையில் உள்ள தண்டாயுதபாணி முருகன் ஆலயத்தில் ஜோதி சாமியார் மீது கல் உரல் வைத்து அரிசி மற்றும் வெல்லம் சேர்த்து மாவாக இடிக்கும்நிகழ்வு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சாமியார் மீது காய்ந்த மிளகாய் பொடி கரைசல் அபிஷேகம் நடைபெற்றது. இதில் அண்மையில் திருமணமான தம்பதிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு வழிபட்டனர். மேலும் அரிசி, வெல்லம் மாவை பிரசாதமாக பெற்றுச்சென்றனர்.