தமிழ்நாடு

மதுரை: ஏடிஎம் -ல் சிறுவர்கள் விளையாடும் ரூ.2000 நோட்டு வந்ததாகப் புகார்

webteam

மதுரையில் ஏடிஎம் இயந்திரத்தில் சிறுவர்கள் விளையாடும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது

மதுரை பசுமலையில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏடிஎம்மில் இருந்து சிறுவர்கள் விளையாடும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இன்று காலை ராஜசேகர் என்பவர் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து ரூ.2000 பணம் எடுத்ததாகவும், அது சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு பணம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து ராஜசேகர், வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளித்துள்ளார். ஏடிஎம் இயந்திரத்தில் விளையாட்டு பணம் வந்த செய்தி அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.