தமிழ்நாடு

அரசு ஊழியர்களுக்கான பதவி உயர்வு: தலைமைச் செயலாளர் முக்கிய கடிதம்

நிவேதா ஜெகராஜா

அரசு ஊழியர்கள் அனைவருக்கும் உரிய காலத்தில் முறையான பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

தகுதியுள்ள அரசு அலுவலர்கள் பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெறுவதை தவிர்க்க வேண்டும் என அனைத்து துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். ஓய்வுபெறும் நாளன்று செயற்கை காலியிடங்களை ஏற்படுத்தி பதவி உயர்வு மேற்கொள்ளப்படுவதாகவும், இதனால் பதவி உயர்வு பெற்று முழு சேவை செய்யாமலேயே பணப் பலன்களை சிலர் பெறுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக இறையன்பு தெரிவித்துள்ளார்.

மேலும் செயற்கை காலிப்பணியிடங்களை ஏற்படுத்துவது, தற்காலிக பதவி உயர்வு வழங்குதல் ஆகியவற்றை தவிர்க்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.