தமிழ்நாடு

கொளத்தூரில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

webteam

சென்னை கொளத்தூரில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பந்தர் கார்டன் அரசு மேல்நிலைப்பள்ளி, லூர்து மேல்நிலைப்பள்ளி, எவர்வின் மேல்நிலைப்பள்ளி, குருகுலம் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் படிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனைதொடர்ந்து, கொளத்தூர் சட்டமன்ற தொகுதி அலுவலகம் முன்பு முதியோர்கள் மற்றும் பெண்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “கல்வி மட்டுமே அத்தனை இழிவுகளில் இருந்தும் விடுவித்து மனித சமுதாயத்தை முன்னேற்றும் என தமிழ்நாட்டின் கல்வி உட்கட்டமைப்பை வளப்படுத்தியவர் தலைவர் கலைஞர்! #என்றென்றும்கலைஞர் புகழ் போற்றும் வகையில், இன்றைய #KolathurVisit-ன்போது, 1330 மாணவச் செல்வங்களுக்கு உதவிகள் வழங்கினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.