தமிழ்நாடு

செம்பரம்பாக்கம் ஏரியை நேரில் பார்வையிடுகிறார் முதல்வர்

செம்பரம்பாக்கம் ஏரியை நேரில் பார்வையிடுகிறார் முதல்வர்

webteam

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்பட உள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.

நிவர் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை அதிதீவிர புயலாக கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்திற்கும் காரைக்காலுக்கு இடையே புயல் கரையை கடக்க உள்ளது. இதனிடையே தொடர்ந்து பெய்து வரும் மழையால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் அளவு 22 அடியை நெருங்க உள்ளது. இதனால் இன்று மதியம் 12 மணியளவில் முதல்கட்டமாக 1000 கன அடி நீரை வெளியேற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி இன்று மதியம் 1000 கன அடி நீர் திறக்கப்பட உள்ளது. இதனிடையே செம்பரம்பாக்கம் பகுதியில் 15 முதல் 20 செ.மீ மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது. இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செம்பரம்பாக்கம் ஏரியை  நேரில் பார்வையிட செல்கிறார்.