தமிழ்நாடு

நியாய விலைக்கடைகளில் பனை வெல்லம் விற்பனை திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்

sharpana

நியாயவிலைக் கடைகளில் பனை வெல்லம் விற்பனை செய்யும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், கைத்தறி மற்றும் ஊரகத் தொழில்துறை சார்பில் பல்வேறு திட்டங்களை காணொலி காட்சி மூலமாக முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி, நியாய விலைக் கடைகளில், கற்பகம் பிராண்ட் பனை வெல்லம் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. பின்னர், ஊரகத் தொழில்துறை சார்பில், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பனை பொருட்கள் பயிற்சி மையத்தை காணொலி காட்சி மூலமாக முதலமைச்சர் திறந்து வைத்தார்.

காதி கிராஃப்ட் பொருட்களை விற்பனை செய்வதற்காக TN-KHADI என்ற புதிய செயலியையும் தொடங்கி வைத்தார். பின்னர், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையாக தமிழ்த்தறி என்ற புதிய ரக பட்டுப்புடவையை அறிமுகம் செய்து வைத்தார்.