ஜோலார் பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டுவருவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கான குடிநீர் விநியோகம் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
முன்னதாக ஜோலார் பேட்டையில் இருந்து சென்னை வில்லிவாக்கத்திற்கு குடிநீர் கொண்டுவரும் சோதனை வெற்றி பெற்றுள்ளது. ரயில்களின் தண்ணீர் ஏற்றும் இறுதி கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இது நிறைவடைந்தவுடன் நாளொன்றுக்கு ஒரு கோடி லிட்டர் தண்ணீர் ஜோலார் பேட்டையில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்படவுள்ளது.
இந்நிலையில், சென்னைக்கு குடிநீர் கொண்டுவருவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் எப்போது முடியும் என்பது குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்று வருகிறது.