பதிவுத் துறையில் இணையவழி வருகையில்லா ஆவணப்பதிவு கட்டாயமாக்கும் புதிய நடைமுறையை முதல்வர் விஜய் தொடங்கிவைத்தார். வணிக வரி மற்றும் பதிவுத் துறை இணைந்து அறிமுகப்படுத்திய இந்த சேவையின் மூலம், மனைப்பிரிவில் முதல் மனை விற்பனை, அடுக்குமாடி குடியிருப்பில் முதல் வீடு விற்பனை போன்ற ஆவணங்கள் இணையதளம் வழியாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பதிவுத் துறையில் இணையவழியில் வருகையில்லா ஆவணப்பதிவு கட்டாயமாக்கல் நடைமுறையை முதல்வர் விஜய் தொடங்கிவைத்தார். வணிக வரி மற்றும் பதிவுத் துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த சேவை மூலம், மனைப்பிரிவில் முதல் மனை விற்பனை, அடுக்குமாடி குடியிருப்பில் முதல் வீடு விற்பனை ஆகியவற்றின் ஆவணங்களை, பதிவுத் துறையின் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இணையவழியில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை 24 மணிநேரத்திற்குள் பதிவு செய்தோ அல்லது திருத்தத்திற்காக திருப்பி அனுப்பியோ அல்லது நிராகரித்தோ சார்பதிவாளர்கள் நடவடிக்கை எடுக்க இந்த நடைமுறை வழிவகை செய்கிறது.