தமிழ்நாடு

கீழடியில் ரூ. 12 கோடியில் அருங்காட்சியகம் : முதல்வர் அறிவிப்பு

webteam

கீழடியில் ரூ. 12.21 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

சென்னை கலைவானர் அரங்கில் தமிழ்நாடு நாள் விழா கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது சிவகங்கை மாவட்டம் கொந்தகை கிராமத்தில் கீழடி பொருட்களை கொண்டு ரூ. 12.21 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் எனத் தெரிவித்தார்.