தமிழ்நாடு

இரண்டு குழந்தைகளுடன் இளம்பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை..!

webteam

ஆவடி அருகே இளம்பெண் இரண்டு கை குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேக்காடு பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (28). இவரது மனைவி விஜயலட்சுமி (22). இவர்களுக்கு இரண்டு வயதில் கவிசரன் என்ற மகனும், நிஸ்வந்த் என்ற 2 மாதக் கைக்குழந்தையும் உள்ளனர். முத்துக்குமார் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இடையில் நீண்ட நாட்களாக பிரச்னை நிலவி வந்ததாகச் சொல்லப்படுகிறது.

இதனால் விரக்தி அடைந்த விஜயலட்சுமி நேற்று தனது இரு குழந்தைகளுடன் ஆவடி அருகே சென்று கொண்டிருந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

இச்சம்பவம் குறித்து ரயில்வே காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கே.எம்.சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.